திருப்பத்தூர் அருகே பைக் மோதியதில் முதியவர் இறந்தார்.
திருப்பத்தூர் கசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (73). இவர், திங்கள்கிழமை திருப்பத்தூர்-சு.பள்ளிப்பட்டு சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் ஆதியூரைச் சேர்ந்த கெளதம், சிவகுமார் ஆகியோர் வந்த பைக் கோபாலகிருஷ்ணன் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணனை அருகே இருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை இறந்தார். இதுகுறித்து கந்திலி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.