பொங்கலுக்குள் பேரறிவாளன் விடுதலையாக வாய்ப்பு: தாயார் அற்புதம்மாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனது மகன் பேரறிவாளன் பொங்கலுக்குள் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை இருப்பதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனது மகன் பேரறிவாளன் பொங்கலுக்குள் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை இருப்பதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரியின் பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் அதுதொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், 2 பேட்டரி வாங்கிக் கொடுத்தது தனக்கு தெரியாது என பேரறிவாளன் கூறியதைப் பதிவு செய்ய மறந்து விட்டதாகவும், அதுதொடர்பான மொழி பெயர்ப்பு பல அர்த்தங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் விசாரணை அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.
இதுவே தனது மகனுக்கு பாதி விடுதலை கிடைத்தது போல இருக்கிறது. பேரறிவாளன் வருகிற பொங்கலுக்குள் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com