ரேஷன் கடையின் பூட்டை உடைத்து உணவுப் பொருள்கள் திருட்டு

அரக்கோணத்தில் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து ரூ. 11ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

அரக்கோணத்தில் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து ரூ. 11ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அரக்கோணம் ஜோதி நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் அரக்கோணம் வட்டார வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான ரேஷன் கடை இயங்கி வருகிறது.
இக்கடையின் விற்பனையாளர், திங்கள்கிழமை மாலை கடையைப் பூட்டி விட்டு சென்றார். செவ்வாய்க்கிழமை காலை வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே 25 கிலோ எடை கொண்ட 4 மூட்டைகளில் இருந்த அரிசி, 2 பெட்டி பாமாயில், 1 பெட்டி சோப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இவற்றின் மதிப்பு ரூ. 11ஆயிரம் என தெரிகிறது.
இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com