சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற இணையவழியில் (ஆன்லைன்) விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் அரசு, உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர் 2017-18-ஆம் ஆண்டுக்கு வருவாய் அடிப்படையில் கல்வி உதவித் தொகை பெற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தகுதியுள்ள மாணவ, மாணவியர் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.