குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ஜெனீப்பர் பிலிப் தலைமை வகித்தார். ஆசிரியை ராணி வரவேற்றார். தொடர்ந்து, மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியைகள் விக்டோரியா செல்வி,
பரமேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.