தீபாவளிக்கு 35 கைதிகள் பரோலில் விடுவிப்பு

தீபாவளி பண்டிகையை ஒட்டி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 35 கைதிகள் பரோலில் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 35 கைதிகள் பரோலில் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
வேலூர் மத்திய சிறையில் சுமார் 40 கைதிகள் பரோல் கேட்டு மனு அளித்திருந்தனர். இவற்றை பரிசீலனை செய்த சிறைத் துறை அதிகாரிகள் 35 பேர் பரோலில் செல்ல அனுமதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை காலை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனைவரும் அக்டோபர் 21-ஆம் தேதி மாலைக்குள் சிறைக்கு திரும்ப உத்தரவிடப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com