ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளியின் தலைவர் எஸ்.ஆர்.ஈஸ்வரப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன், இணைச் செயலாளர் செந்தாமரைகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் மா.தேவராஜன் வரவேற்றார். செயலாளர் சொல்.முத்தழகன் அப்துல் கலாம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில், பள்ளியின் பொருளாளர் மா.ஜோதி, இணைச் செயலாளர் திருஞானம், நிர்வாக அலுவலர் கே.வேலானந்தன் ஆகியோர் இளைஞர் எழுச்சி தினம் குறித்து பேசினர். மேலும், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. துணை முதல்வர் மணிசேகரன் நன்றி கூறினார்.
திமிரி ஆண்கள் பள்ளி: திமிரி அக்னி சிறகுகள் மன்றம் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.ஞானசேகரன் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர்கள் திருஞானமூர்த்தி, தவபூஷணம், எழிலரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் சோ.சம்பத் வரவேற்றார். அக்னி சிறகுகள் மன்றத் தலைவர் அப்துல் காலம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவில் நிர்வாகிகள் ஏகம்பரம், ராஜி, ஜெயபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.