பைக் திருடிய 2 பேர் கைது: 6 பைக்குகள் பறிமுதல்

வாணியம்பாடியில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாணியம்பாடியில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாணியம்பாடி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முஹித்தீன். இவர் கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டின் அருகே தனது பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். சிறிது நேரத்துப் பிறகு வந்து பார்த்த போது பைக் காணாமல் போனது தெரியவந்தது. அருகே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது இளைஞர் ஒருவர் மாற்று சாவி போட்டு பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான இளைஞரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ் (25) பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், திருடிய பைக்கை கபூராபாத் பகுதியில் வசிக்கும் முகமது இஸ்மாயிலிடம் கொடுத்துள்ளதாகக் கூறினார்.
இதையடுத்து முகமது இஸ்மாயில் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில், பைக்கில் இருந்த பொருள்கள் அனைத்தும் தனித்தனியாக பிரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. மேலும், 5 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இம்தியாஸ், முகமது இஸ்மாயில் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com