மின்சாரம் பாய்ந்து ஊழியர் சாவு

காட்பாடி ரயில் நிலைய உணவகத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஊழியர் திங்கள்கிழமை இரவு இறந்தார்.

காட்பாடி ரயில் நிலைய உணவகத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஊழியர் திங்கள்கிழமை இரவு இறந்தார்.
காட்பாடி அருகே தாராபடவேடு பகுதியைச் சேர்ந்தவர் சபேஷ் 20). இவர், காட்பாடி ரயில் நிலைய 2-ஆவது நடைமேடையில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தார். திங்கள்கிழமை இரவு சுவிட்சை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.
இதுகுறித்து காட்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com