வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக லலிதா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இக்கல்லூரி முதல்வராக இருந்த உஷா சதாசிவம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து , தேனி மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்த லலிதா, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட லலிதாவுக்கு, மருத்துவர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.