ஆம்பூர் எம்எல்ஏவை காணவில்லை என அதிமுகவினர் நகரக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர்.
அதிமுகவைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் அதிமுக (அம்மா) அணித் துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக கர்நாடக மாநிலம், குடகு பகுதியில் தனியார் விடுதியில் தங்கியிருக்கின்றனர். இதில், ஆம்பூர் எம்எல்ஏ ஆர்.பாலசுப்பிரமணி, குடியாத்தம் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்டோரும் உள்ளனர். இந்நிலையில், ஆம்பூர் எம்எல்ஏ ஆர்.பாலசுப்பிரமணியை காணவில்லை எனக் கூறி ஆம்பூர் நகர அதிமுக செயலாளர் எம். மதியழகன் தலைமையில் அக்கட்சியினர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து நகரச் செயலாளர் எம். மதியழகன் கூறியதாவது: ஆம்பூரில் பல்வேறு பிரசனைகள் உள்ளன. அதனால் மக்கள் என்னிடம் வந்து முறையிடுகின்றனர். எனவே தான் போலீஸில் புகார் அளித்தோம் என்றார்.