டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு: பாமக ஆர்ப்பாட்டம்

ஆற்காடு-ஆரணி சாலையில் டாஸ்மாக் மதுக் கடை மீண்டும் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுக் கடையின் முன் பாமகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆற்காடு-ஆரணி சாலையில் டாஸ்மாக் மதுக் கடை மீண்டும் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுக் கடையின் முன் பாமகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஆற்காடு நகரச் செயலாளர் வழக்குரைஞர் எம்.எஸ்.அருள்குமார் தலைமை வகித்தார். மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் சரவணன், பசுமை த்தாயகம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன், நகரத் தலைவர் ஏகாம்பரம், நிர்வாகிகள் விஜயகுமார், கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், மதுக் கடைகளை மீண்டும் திறந்த தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையொட்டி பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com