மக்கள் குறைகளைத் தீர்க்க அதிகாரிகளுடன் தினமும் பேசி வருகிறேன்: எம்எல்ஏ ஆர்.பாலசுப்பிரமணி

மக்கள் குறைகளைத் தீர்க்க தினமும் அதிகாரிகளுடன் பேசி வருவதாக ஆம்பூர் எம்எல்ஏ ஆர். பாலசுப்பிரமணி தெரிவித்தார்.

மக்கள் குறைகளைத் தீர்க்க தினமும் அதிகாரிகளுடன் பேசி வருவதாக ஆம்பூர் எம்எல்ஏ ஆர். பாலசுப்பிரமணி தெரிவித்தார்.
இதுதொடர்பாக தினமணி செய்தியாளரை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:
அதிமுகவுக்கு இது சோதனையான காலம். கட்சிக்கு ஏற்பட்டுள்ள சோதனைக்குத் தீர்வு காண்பதற்காக தொகுதியை விட்டு வெளியில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இடைத் தேர்தல்கள் நடக்கும் போது கட்சி வேட்பாளருக்காக தேர்தல் பணி செய்வதற்காக பல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கடந்த காலங்களில் தங்களுடைய தொகுதியை விட்டு வெளியூர்களில் பல நாள்கள் தங்கியிருந்திருக்கிறார்கள்.
சிலருடைய கட்டாயத்தின் பேரில் என்னை கண்டுபிடித்து தரக் கோரி சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், சுய விளம்பரத்துக்காகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தினந்தோறும் தங்களுடைய தேவைகள், குறைகளுக்காக என்னை செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்கின்றனர். அவர்களுடைய பிரச்னைகளைத் தீர்க்க தினமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். செப்டம்பர் 14-ஆம் ஆம்பூரில் நெடுஞ்சாலைத் துறையினரால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது கூட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு ஆக்கிரமிப்பு அகற்றும்படி கேட்டுக் கொண்டேன்.
மேலும் எனது சார்பாக என்னுடைய பிரதிநிதிகள் ஆம்பூரில் இருந்து நான் செய்ய வேண்டிய பணிகளை செய்து வருகின்றனர். அதிகாரிகளுடன் தினமும் தொடர்பு கொண்டு மக்கள் நலத் திட்ட பணிகளின் நிலை குறித்தும் கேட்டறிந்து வருகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com