ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், அவரது மனைவி நளினி ஆகியோர் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
வேலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள முருகன் நீதிமன்ற உத்தரவுப்படி, பெண்கள் சிறையில் உள்ள தனது மனைவி நளினியை 15 நாள்களுக்கு ஒருமுறை சந்தித்துப் பேசி வருகிறார். அதன்படி, மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முருகன், நளினி சந்திப்பு அரைமணி நேரம் நடைபெற்றது.
இதையடுத்து முருகன் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டார்.