மாதனூரில் பெண் வருவாய் ஆய்வாளரை தரக்குறைவாகப் பேசியதாக 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது
செய்தனர்.
மாதனூர் அருகே திருமலை குப்பத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புளிய மர ஏலம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த சிலர் நெடுஞ்சாலைத் துறை வருவாய் ஆய்வாளர் லீலாவதியிடம் தகராறு செய்ததாகத் தெரிகிறது. மேலும் புளிய மர ஏலத்தை தடுத்து தரக்குறைவாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆம்பூர் கிராமியக் காவல் நிலையத்தில் லீலாவதி அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து தரக்குறைவாகப் பேசியதாக, திருமலைகுப்பத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் (33), சாரதி (22), முருகேசன் (45) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.