பிரத்யங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம்

சித்திரை மாத அமாவாசையையொட்டி, ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் உள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.

சித்திரை மாத அமாவாசையையொட்டி, ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் உள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.
விழாவில், கோயில் அறங்காவலர் பாலமுருகனடிமை பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில், இரவு 7 மணியளவில் கணபதி ஹோமத்துடன் மகா யாகம் தொடங்கியது. தொடர்ந்து, மகா சுதர்சன யாகம், சண்டி யாகம், வராஹி யாகம் உள்ளிட்ட 21 வகையான யாகங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் உலக நன்மை மற்றும் மழை வேண்டி நிகும்பலா யாகம் நடைபெற்றது. பின்னர் கலசப் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து, பிரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.
இதில், ராணிப்பேட்டை சுற்று வட்டாரம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com