ஆற்காடு ராமகிருஷ்ணா விவேகானந்தா மன்றம் சார்பில், ஆற்காட்டை அடுத்த மாங்காடு கிராமத்தில், புதிதாக கட்டப்பட உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, விளையாட்டு அகாதெமி, சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகியவற்றின் கட்டடப் பணிக்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தலைவர் எஸ்.ஆர்.ஈஸ்வரப்பன் தலைமை வகித்தார்.
செயலாளர் சொல்முத்தழகன், பொருளாளர் கவிஞர் மா.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளியின் துணைத் தலைவர் கார்த்திகேயன், இணைச் செயலாளர் செந்தாமரைக் கண்ணன், நிர்வாக அலுவலர் கே.வேலாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.