அரக்கோணம் பழனிபேட்டையில் உள்ள சாணாத்தியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அரக்கோணம் பழனிபேட்டையில் ஸ்ரீசாணாத்தியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடாவருடம் ஆடித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இவ்வருட ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை சிறப்பாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அம்மன் அலங்கரிக்கப்பட்ட நிலையில், பழனிபேட்டையின் அனைத்து தெருக்களிலும் திருவீதியுலா நடைபெற்றது.
விழாவில், கோயில் தர்மகர்த்தா துரைகுப்புசாமி, திருவிழாக் குழுத் தலைவர் துரைசீனிவாசன், கோயில் நிர்வாகிகள் இ.கெளரிசங்கர், வி.கோவிந்தராஜ், ஆர்.பச்சையப்பன், கே.கிரண்குமார், எஸ்.தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.