இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி, இந்து முன்னணியினர்

அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி, இந்து முன்னணியினர்  ஆற்காடு பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.பி.ஜெகன் தலைமை வகித்தார். கோட்ட அமைப்பாளர் ரகு, கிழக்கு மாவட்டச் செயலர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மோகன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி வழக்குரைஞர் பிரிவு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்  ரத்தினகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரை நிகழ்த்தினார்.இதில் இந்து முன்னணியை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூரில்...
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி அமைப்பின் ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலர் எஸ்.சோமேஸ்வரன் தலைமை வகித்தார். வேலூர் மேற்கு மாவட்டச் செயலர் விட்டல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வேலூர் கோட்டச் செயலர் ரவி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். 
ஆர்ப்பாட்டத்தில், விரைவில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com