இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் தொழில்முனைவோருக்கு விரைவில் அனுமதி : மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் விரைவில் அனுமதி வழங்கப்படும் என மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளர் மணிவண்ணன் கூறினார்.


இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் விரைவில் அனுமதி வழங்கப்படும் என மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளர் மணிவண்ணன் கூறினார்.
அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் -2019 மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது: உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு -2019 அனைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் ரூ. 1,200 கோடி முதலீட்டை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தொழில் மையம் செய்து வருகிறது.
மேலும், பாரதப் பிரதமரின் புதிய திட்டத்தின் கீழ், தற்போது வேலூர் மாவட்டத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் தொழில்முனைவோர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் விரைவில் அனுமதி அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அவர்களது அனைத்து கோரிக்கைகளையும் 100 நாள்களுக்குள் நிறைவேற்றி 101-ஆவது நாள் தொழிலை தொடங்கும் அளவுக்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரக்கோணம் சிட்கோவில் ஏற்கெனவே விண்ணப்பித்த தொழில்முனைவோர்களின் அனைத்து பிரச்னைகளையும் விரைந்து தீர்ப்பதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்ட தொழில் மையம் செய்து வருகிறது என்றார்.
கூட்டத்துக்கு, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் சுந்தரராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், அரக்கோணம் பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் ஏ.ஆர்.ரகுநாதன், பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் சுகன்யா, அரக்கோணம் சிட்கோ உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜெயக்குமார், கெளரவத் தலைவர் ஆதம்நேசன், பொருளாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com