டிச.11-இல் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் வேலூர் வருகை

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பேராயர் எம். பிரகாஷ் மற்றும் ஆணையக் குழு உறுப்பினர்கள் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) வேலூருக்கு


தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பேராயர் எம். பிரகாஷ் மற்றும் ஆணையக் குழு உறுப்பினர்கள் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) வேலூருக்கு வருகை தர உள்ளனர் என வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வேலூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா, பாரதப் பிரதமரின் 15 அம்ச திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு சிறுபான்மையினருக்கு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள், மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரைச் சந்தித்து தங்களுடைய குறைகள், அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்கான கருத்துகளையும் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com