குடியாத்தம் நகரில் உள்ள 2 பிரபல நகைக் கடைகளில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
சந்தப்பேட்டை பஜாரில் உள்ள 2 பிரபல நகைக் கடைகளில் சென்னையில் இருந்து வந்த 5 பெண் அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் சோதனை நடத்தினர். பிற்பகல் தொடங்கிய இச்சோதனை இரவு வரை நடைபெற்றது. இதனால் பஜாரில் பரபரப்பு ஏற்பட்டது.