ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரி சீதக்காதி தமிழ் இலக்கிய மன்றம், ஒரு துளி கவிதை அமைப்பு, ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம் சார்பில் ஈரோடு தமிழன்பனின் ஆயிரம் கவிதை தொடர் வாசிப்பு நிகழ்ச்சி கல்லூரியின் என்.எம்.இஜட். அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் பி.எம். ஆதில் அஹமத் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தமிழ்த் துறைத் தலைவர் அ. மீரா மைதீன் வரவேற்றார். துறைத் தலைவர்கள் முஹம்மத் யூனுஸ், ஷபீ அஹமத் கான் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று ஈரோடு தமிழன்பனின் கவிதைகளை வாசித்தனர். மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேராசிரியை இரா.காந்திமதி நன்றி கூறினார்.