வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் விழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடினர்.
விழாவுக்கு, வட்டாட்சியர் முரளிகுமார் தலைமை வகித்தார். வருவாய்த் துறை அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் பாரம்பரிய உடை அணிந்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கரும்பு, பூஜை பொருள்களைக் கொண்டு புதிய பானையில் சமத்துவ பொங்கலிட்டுக் கொண்டாடினர்.
இதில், மண்டல துணை வட்டாட்சியர் பழனி, வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) சுமதி, வருவாய் ஆய்வாளர்கள் ராஜ்குமார், கார்த்தி, நிர்மலா, விமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.