ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது.
அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் கடந்த சில நாள்களாக ஆம்பூரில் கடுமையான வெயில் காய்ந்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் மழை நீடித்தது. மழை காரணமாக குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.