லாரி-கார் மோதல்: பெண் சாவு

குடியாத்தம் அருகே லாரியும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் பெண் உயிரிழந்தார்.

குடியாத்தம் அருகே லாரியும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் பெண் உயிரிழந்தார்.
குடியாத்தம் நெல்லூர்பேட்டை, தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் எல்.ஐ.சி. முகவர் சண்முகம் (68). இவரது மனைவி ஹேமாவதி (60). இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை காரில் வேலூருக்குச் சென்றனர். வேப்பூர் அருகே சென்றபோது சென்னையிலிருந்து எதிரே வந்த லாரி, கார் மீது மோதியுள்ளது. இதில் ஹேமாவதி நிகழ்விடத்திலேயே இறந்தார். சண்முகம், கார் ஓட்டுநர் சித்தூர்கேட்டைச் சேர்ந்த சோமேஸ்வர் (27) ஆகிய இருவரும் காயமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com