வீட்டுவசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு சிறப்புச் சலுகை

வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று தவணை செலுத்தத் தவறியவர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று தவணை செலுத்தத் தவறியவர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வீட்டுவசதி வாரியத்தின் வேலூர் பிரிவு செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வேலூர் வீட்டுவசதி பிரிவு சார்பில், மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்கள் மாதாந்திர தவணை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி, அசல் மீதான வட்டி முழுவதுமாகவும், நிலத்தின் இறுதிவிலை வித்தியாசத்தின் மீதான வட்டியை வருடத்துக்கு 5 மாதம் மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
 இந்த சலுகை மூலம் இதுவரை விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்கள் இந்த சிறப்புச் சலுகையைப் பயன்படுத்தி வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகை முழுவதும் ஒரே தவணையாக செலுத்தி தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலகுகளுக்கு கிரையப்பத்திரம் பெற்று பயனடைய வேண்டும். இந்த சலுகை வாலாஜா புறநகர் திட்டம் பகுதி 2 மனைகள், சுயநிதித் திட்டங்கள், ஏல மனைகள், ரத்து செய்யப்பட்ட இனங்களுக்கு பொருந்தாது.
மேலும் விவரங்களுக்கு 0416-2252561 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com