சென்னை-அரக்கோணத்துக்கு இன்று முதல் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் சேவை

சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-அரக்கோணம் பிரிவில் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் சேவை  புதன்கிழமை அறிமுகப்படுத்தப்படுகிறது.

சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-அரக்கோணம் பிரிவில் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் சேவை  புதன்கிழமை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ரயில்  சேவை திருவள்ளூர், அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும்.  
இதன் விவரம்:
சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-திருவள்ளூருக்கு காலை 4.30,  8.05,  முற்பகல் 11.30, பிற்பகல் 2.35 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில்  திருவள்ளூர்- சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸுக்கு காலை 5.55, காலை 9.25, மதியம் 1.05, மாலை 4 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
இதுபோல, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-அரக்கோணத்துக்கு மாலை 6.40 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, அரக்கோணம்-மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸுக்கு இரவு 9.25 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com