ஆம்பூர் அருகே அங்கன்வாடி பணியாளரிடம் தங்கச் சங்கிலி பறித்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மனைவி ரஞ்சிதம் (40). இவர் காரப்பட்டு கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறார்.
ரஞ்சிதம் பணியில் இருந்தபோது சிலர் அவரிடம் சென்று தகராறு செய்தனர். அப்போது அவர் அணிருந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ரஞ்சிதம் உமர்ஆபாத் போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜை (25) கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பலராமன், அஜீத் ஆகியோரை தேடி வருகின்றனர்.