பேர்ணாம்பட்டு அருகே கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பேர்ணாம்பட்டு மேஸ்திரி வீதியில் பழைமையான பிரசன்னவெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் கோயிலின் பின்பக்க வழியாக உள்ளே நுழைந்து கோயிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.