வாணியம்பாடியில் போலி நகைகளை விற்பனை செய்ததாக தாய், மகள் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் நெய்காரன்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காளியம்மாள் (55). இவரது மகள் நந்தினி (24). இவர்கள் இருவரும் வாணியம்பாடி பகுதியில் போலியான நாணக்குழாய், கொலுசு உள்ளிட்ட பல்வேறு நகைகளைக் கொண்டு வந்து மக்களை ஏமாற்றி விற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கச்சேரி சாலையில் ஒரு வீட்டில் போலி நகை விற்பனை செய்தபோது இருவரையும் பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.