கொசு ஒழிப்புப் பணிகளைப் பார்வையிட்டு வேலூர் மத்திய சிறையில் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
வேலூர் மத்திய சிறையில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, விழிப்புணர்வு மற்றும் கைகழுவும் நிகழ்ச்சியில் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கலந்துகொண்டார். மேலும், மத்திய சிறையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, சிறைத் துறை கண்காணிப்பாளர் ஆண்டாள், மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.