மின் கம்பத்தில் பைக் மோதல்: கல்லூரி மாணவர் சாவு

ஆற்காடு அருகே மின் கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

ஆற்காடு அருகே மின் கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
 ஆற்காடு அருகே வாழைப்பந்தலை அடுத்த சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (18). இவர், செய்யாறு அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவர் சனிக்கிழமை தனது நண்பர் தினேஷ்குமாருடன் பைக்கில் செய்யாறு-ஆரணி சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
 எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட இடது பக்கம் திரும்பியபோது, அருகில் இருந்த மின் கம்பத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பாலசுப்பிரமணியம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தினேஷ்குமார் காயமடைந்து, செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரின் வாழைப்பந்தல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com