தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்குப் பாராட்டு

பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவர்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவர்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
 திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நடத்திய மண்டலங்களுக்கிடையிலான தடகளப் போட்டிகள் வேலூரில் அண்மையில் நடைபெற்றன. 
இதில், கே.எம்.ஜி.கல்லூரி மாணவர்கள் கே.உதயகுமார் நீளம் தாண்டுதலில் 2-ஆம் இடமும், டி.விக்ரம் கோலூன்றி தாண்டுதலில் 2-ஆம் இடமும், ஜி. கணேஷ் கோலூன்றி தாண்டுதலில் 3-ஆம் இடமும், எஸ்.ஜெகதீஷ் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 3-ஆம் இடமும், பி.மோகன்ராஜ் அரை மாரத்தான் போட்டியில் 3-ஆம் இடமும் பிடித்து சாதனை 
படைத்தனர். 
அந்த மாணவர்களை கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், செயலர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், இயக்குநர் த.கஜபதி, முதல்வர் எம்.ஜெயஸ்ரீராணி, உடற்கல்வி பேராசிரியர்கள் ஆர்.ரஞ்சிதம், பி.ஞானகுமார் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com