ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு முதியவர் இறந்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம்(80). இவர், திருப்பதிக்கு செல்ல வியாழக்கிழமை நள்ளிரவு ஜோலார்பேட்டை வந்தார். ரயிலுக்காக 4-ஆவது நடைமேடையில் காத்திருந்த போது, திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் ராஜாராமை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.