ஆம்பூர் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சார்பில் தேவலாபுரம் திருப்பதி கெங்கையம்மன் கோயில் மூலவருக்கு வெள்ளிக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி சார்பில் வழங்கப்பட்ட வெள்ளிக் கவசம் தேவலாபுரம் பள்ளி வளாகத்திலிருந்து மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மூலவருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்து பாரதிய கல்வி அறக்கட்டளைத் தலைவர் எம்.விமல்சந்த், துணைத் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் சி.லிக்மிசந்த், இணைச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், பொருளாளர் டி.எஸ்.தேவராஜன், தாளாளர் எம்.தீனதயாளன், கோயில் திருப்பணிக் குழுத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.