பூட்டிய வீட்டிற்குள் தாய், மகன் சடலங்கள் மீட்பு

வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டிற்குள் தாய் மற்றும் மகன் ஆகிய  இரு சடலங்கள் மீட்கப்பட்டன.

வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டிற்குள் தாய் மற்றும் மகன் ஆகிய  இரு சடலங்கள் மீட்கப்பட்டன.
வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தாயியம்மாள்(95). இவரது மகன் பிரகாசம் (60). இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வீடு பூட்டிய நிலையில் இருந்தது. 
மேலும், வெள்ளிக்கிழமை காலை வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் அருகே இருந்தவர்கள் ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையில் காத்தாயியம்மாளும், மற்றொரு அறையில் பிரகாசம் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தனர். இதையடுத்து இரு சடலங்களையும் போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com