மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் சாவு

பேர்ணாம்பட்டு அருகே மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் இறந்தார்.

பேர்ணாம்பட்டு அருகே மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் 
இறந்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வியாழக்கிழமை இரவு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்று கொண்டிருந்தது. 
அந்த லாரி பேர்ணாம்பட்டு அருகே தமிழக எல்லையான பத்தரபல்லி மலைப் பாதையில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இதில், ராணிப்பேட்டை சிப்காட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரஞ்சித் (30) நிகழ்விடத்திலேயே இறந்தார். இதுகுறித்து பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com