ஆற்காடு அருகே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரிப் பேராசிரியர் வியாழக்கிழமை இறந்தார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் வஹாப் (38). இவர், மேல்விஷாரம் தனியார் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராக வேலை செய்து வந்தார். ஆற்காட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி வீட்டிலிருந்து கல்லூரிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
ஆற்காடு மாசப்பேட்டை அருகே சென்றபோது பின்னால் வந்த பைக் பேராசிரியர் அப்துல் வஹாப் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவர் மேல்விஷாரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வியாழக்கிழமை அப்துல் வஹாப் இறந்தார். இதுகுறித்து ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.