மேல்பட்டி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு இறந்தார்.
ஆம்பூரை அடுத்த மேல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்ன கண்ணுவின் மனைவி சாரதம்மாள் (70). இவர், செவ்வாய்க்கிழமை மேல்பட்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சாரதாம்பாள் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த ஜோலர்பேட்டை ரயில்வே போலீஸார் அங்கு சென்று சாரதாம்பாளின் சடலத்தை மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.