செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வாணியம்பாடியில் தனியார் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க  எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

வாணியம்பாடியில் தனியார் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க  எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
வாணியம்பாடி சலாமாபாத் பகுதியில் தனியார் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு மற்றும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும் எனக் கூறி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்
கிழமை அப்பணியை தடுத்து நிறுத்த முயன்றனர். 
இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெறதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்து, செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com