இரு மகள்களைக் கொன்று தந்தை தற்கொலை

வேலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக தனது இரு மகள்களைக் கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வேலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக தனது இரு மகள்களைக் கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
வேலூர் அருகே மேல்மொணவூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன் வெங்கடேஷ் (45). டெய்லராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கமலா (35) கீரை வியாபாரம் செய்து வருகிறார். இவர்களது மகள்கள் மேகலா  (9), திவ்யா (7). அப்பகுதியிலுள்ள பள்ளியில் 4 மற்றும் 2-ஆம் வகுப்புகளில் 
படித்து வந்தனர். 
வெங்கடேஷ் பல இடங்களில் கடன் வாங்கியிருந்ததாகவும்,   குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததாகவும் தெரிகிறது. 
இந்நிலையில், கீரை வியாபாரத்துக்காக திங்கள்கிழமை காலை வெளியில் சென்றிருந்த கமலா,   மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது, கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்த நிலையில், ஜன்னல் வழியாக கமலா வீட்டுக்குள் பார்த்துள்ளார். அதில்  வெங்கடேஷும், தனது இரு மகள்களும்,  இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸாருக்கு கமலா தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, மேகலா, திவ்யா ஆகியோரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, வெங்கடேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, 3 பேரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். 
இச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com