வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பெளர்ணமியையொட்டி, காத்யாயனி யாகம், சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம் மற்றும் கோடிஜப மகா தன்வந்திரி ஹோமம் ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, மாலை ராகு - கேதுவுக்கு அன்னாபிஷேகமும், 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளும், ஸ்ரீ சத்திய நாராயண பெருமாளுக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றன. இதில் சென்னை உயர் நீதிமன்ற (மதுரைக் கிளை) நீதிபதி, எம்.வி. முரளிதரன் குடும்பத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.