தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் பெற வசதியாக எஸ்டேட் பகுதிகளில் ஏ.டி.எம். அமைக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தற்போது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஏ.டி.எம்.களில் போதுமான பணம் இல்லாததால் மாலை நேரத்தில் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க வரும் தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இந்நிலையில், தற்போது வால்பாறையை அடுத்த வாட்டர்பால் எஸ்டேட்டில் யூனியன் வங்கி சார்பில் ஏ.டி.எம். அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, வால்பாறையை அடுத்த மளுக்குப்பாறை எஸ்டேட்டிலும் ஸ்டேட் வங்கி சார்பில் ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.