மதுக் கடை அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

மதுக்கரை அருகே மதுக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

மதுக்கரை அருகே மதுக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
கோவையை அடுத்த மதுக்கரை அருகே ஈச்சனாரி சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் நகரில் புதிதாக மதுக் கடை திறக்கும் முயற்சியில் டாஸ்மாக் நிர்வாகம் கடந்த மாதம் ஈடுபட்டது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதுடன், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு மதுக் கடை திறக்கும் முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில், சென்னை சில்க்ஸ் நகரில் புதிதாக மதுக் கடை அமைக்க வெள்ளிக்கிளமை இரவு பூமி பூஜை போட்டு இலவசமாக மது பாட்டில்களை வழங்கியதாக தகவல் பரவியது.
இதையடுத்து, அப்பகுதி மதுக்கரை-ஈச்சனாரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த மதுக்கரை போலீஸார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், அப்பகுதியில் மதுக் கடை திறக்கப்பட மாட்டாது என உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com