பெண்ணிடம் நகைப்பறிப்பு

கோவையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து  4.5 பவுன் நகையை மர்ம நபர்கள் திங்கள்கிழமை பறித்துச் சென்றனர். 

கோவையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து  4.5 பவுன் நகையை மர்ம நபர்கள் திங்கள்கிழமை பறித்துச் சென்றனர். 
கோவை,  சாய்பாபா காலனி ராமலிங்கம் சாலையைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மலர்விழி (33). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில்,  வழக்கம்போல் பணிமுடிந்து பாரதி பார்க் அருகே திங்கள்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென மலர்விழி அணிந்திருந்த 4.5 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில்,  சாய்பாபா காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com