அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு ஆலயம் அமைக்க கோரி இந்து முன்னணி சார்பில் காவிக்கொடி ஆர்ப்பாட்டம் மேட்டுப்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாவட்டபொதுச்செயலர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் தங்கவேல் வரவேற்றார். ஆர்எஸ்எஸ் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த், அயோத்தியில் ராமருக்கு ஆலயம் அமைப்பதன் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இதில் 50 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறுமுகை ராஜா நன்றி கூறினார்.
காரமடையில்...: காரமடை நகர, ஒன்றிய இந்து முன்னணி சார்பில் காரமடை கார் நிறுத்த மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் கே.டி சிவப்புகழ் தலைமை வகித்தார்.
மாநிலப் பேச்சாளர் மனோகரன், நகரத் தலைவர் குமார், பொதுச்செயலர் குருதேவன், ஒன்றியத் தலைவர் மந்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
துடியலூரில்...: கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட செயலாளர் உருவை பாலன் தலைமை வகித்தார். பொருளாளர் தியாகராஜன், பாஜக நிர்வாகி நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தகவல் தொடர்பாளர் ஜெய்கார்த்திக் வரவேற்றார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் குணா உள்பட பலர் பேசினார். மாவட்ட நிர்வாகி கோவிந்தன் நன்றி கூறினார்.
பொள்ளாச்சியில்...:பொள்ளாச்சியில் காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் ரவி, சீனிவாசன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சூலூரில்...: சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மேற்கு மாவட்டத் தலைவர் ஆர்.எம். சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கண்ணம்பாளையம் நகரச் செயலாளர் சசிகுமார் வரவேற்றார்.
இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வி.எஸ்.செந்தில்குமார் சிறப்புரையாற்றினார்.
வால்பாறையில்...: வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகி அன்பழகன், சுந்தர்ராஜன் (பாஜக), தங்கவேல், கார்த்தி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.