அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்ட வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கிம் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலர் முகமது அலி, மாவட்ட பொதுச்செயலர் முகமது நெளபல், மாநில செயற்குழு உறுப்பினர் உமர் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்டத் தலைவர் ராபியா, பாபுலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலர் காதர் பாட்சா, மாவட்டத் தலைவர் காஜா மைதீன், விடுதலை சிறுத்தைகள் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகி குடியரசு, தமிழ் புலிகள் மாநில நிர்வாகி சபாபதி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சியில் தமுமுக ஆர்ப்பாட்டம்:
பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் கபூர், நிர்வாகிகள் சேக் அப்துல்லா, சாகுல்அமீது உள்பட பலர் பங்கேற்றனர்.