கோவை நீதிமன்றத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை குற்றவியல் வழக்குரைஞர்கள் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கோவை குற்றவியல் வழக்குரைஞர்கள் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். இதில், அம்பேத்கரின் உருவப் படத்துக்கு அனைத்து வழக்குரைஞர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 
இந்நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். இதில், சங்க பொருளாளர் ஹரிகிருஷ்ணன், வழக்குரைஞர்கள் சங்க செயலர் விஸ்வநாதன், வழக்குரைஞர்கள் பாலமுருகன், ஆனந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காவல் ஆணையர் 
அலுவலகம் முற்றுகை: 
கோவையில் அம்பேத்கருக்கு சிலை அமைக்கக்கோரி  ஆதித் தமிழர் கட்சியினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பின்னர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி 25 பேரைக் கைது செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்ற வளாகம் முன்னர் அம்பேத்கர் முகமூடி அணிந்து சமூக நீதிக்கட்சியினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com