பொள்ளாச்சி அரசு மருத்துவமனை விரிவாக்கத்துக்கு 2.32 ஏக்கர் இடம் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை விரிவாக்கத்துக்குப் போதிய இடம் இல்லாததால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவமனையை ஒட்டியுள்ள செயல்படாத அரசு பள்ளி மற்றும் அதன் அருகே உள்ள இடம் போன்றவை வழங்க கோரிக்கை வைத்திருந்தனர்.
இக் கோரிக்கையை அடுத்து மருத்துவமனையை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு இடம் மற்றும் அரசு பள்ளி இடம் என மொத்தம் 2.32 ஏக்கர் இடத்தை அரசு மருத்துவமனை விரிவாக்கத்துக்கு ஒதுக்கி தமிழக அரசு வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.